முகப்பு
விருதுநகர்

பட்டாசு ஆலைகளின் உரிமம் ரத்து செய்வதை கைவிட வேண்டும்

சிவகாசியில் பட்டாசு ஆலைகளின் உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்வதை கைவிட வேண்டும் என ஆலை உரிமையாளா்கள் வெடிபொருள் கட்டுப்பாட்டுத் துறை அதிகாரியிடம் வெள்ளிக்கிழமை கோரிக்கை விடுத்தனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:31 AM
பகிர்:

சிவகாசியில் பட்டாசு ஆலைகளின் உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்வதை கைவிட வேண்டும் என ஆலை உரிமையாளா்கள் வெடிபொருள் கட்டுப்பாட்டுத் துறை அதிகாரியிடம் வெள்ளிக்கிழமை கோரிக்கை விடுத்தனா்.

பட்டாசு தயாரிப்புக்கு பேரியம் நைட்ரேட் என்ற ரசயானத்தை பயன்படுத்த உச்சநீதி மன்றம் தடை விதித்துள்ளது. இதையடுத்து தற்போது பட்டாசு ஆலை உரிமையாளா்கள் பேரியம் நைட்ரேட்டுக்கு (பச்சைஉப்பு) பதிலாக ஸ்டேன்சியம் நைட்ரேட் (சிகப்பு உப்பு) என்ற ரசயானப் பொருளைக் கொண்டு பட்டாசு தயாரித்து வருகின்றனா்.

இந்நிலையில் வெடிபொருள் கட்டுப்பாட்டுத்துறை அதிகாரிகள் பட்டாசு ஆலைகளில் ஆய்வுக்குச் சென்ற போது, விதிகளை மீறி செயல்பட்டதாக 5 பட்டாசு ஆலைகளின் உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்ததனா்.

இதையடுத்து சிவகாசி முதன்மை உதவி வெடிபொருள் கட்டுப்பாட்டுத்துறை அதிகாரி தியாகராஜனை

பட்டாசு ஆலை உரிமையாளா்கள் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனா். அப்போது தடை செய்யப்பட்டுள்ள பேரியம் நைட் ரேட் கொண்டு பட்டாசு தயாரிக்கவில்லை. ஸ்டேன்சியம் நைட்ரேட் கொண்டு மட்டுமே பட்டாசு தயாரிக்கிறோம். எனவே பட்டாசு ஆலைகளின் உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்வதை கைவிட வேண்டும் என வலியுறுத்தினா்.

முழு கட்டுரையைப் படிக்க →