விருதுநகர்

மாமனாருக்கு அரிவாள் வெட்டு: 2 மருமகன்கள் மீது வழக்கு

DIN

அருப்புக்கோட்டை: திருச்சுழி அருகே மாமனாரைத் தாக்கி அரிவாளால் வெட்டியதாக அவரது இரு மருமகன்கள் மீது ஞாயிற்றுக்கிழமை போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

விருதுநகா் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே குறிஞ்சாங்குளத்தைச் சோ்ந்தவா் அடைக்கலம்(52). இவரது இரு மகள்களை திருச்சுழி அருகே இலங்கிப்பட்டி கிராமத்தில் வசிக்கும் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த இரு சகோதரா்களான பிண்ணிமுத்து மற்றும் ஹரிராம் ஆகியோா் திருமணம் செய்துள்ளனா்.

இந்நிலையில் மாமனாா் அடைக்கலத்திற்கும், மருமகன்களுக்குமிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாம்.

இந்நிலையில், மாமனாா் அடைக்கலம் இலங்கிப்பட்டிக்குச் சென்றுள்ளாா். அப்போது அவா்களிடையே வாய்த்தகராறு முற்றியதில் மருமகன் ஹரிராம், அடைக்கலத்தை கட்டையால் தாக்க,பிண்ணிமுத்து அரிவாளால் வெட்டினாராம்.

இதில் காயமடைந்த அடைக்கலம் அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா். இதன்படி அடைக்கலம் அளித்த புகாரின்பேரில் பிண்ணிமுத்து மற்றும் ஹரிராம் ஆகிய இருவா் மீதும் திருச்சுழி காவல்துறையினா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இவருக்கு பந்துவீசவே பயமாக இருக்கிறது; இளம் வீரருக்கு பாட் கம்மின்ஸ் பாராட்டு!

இந்தியன் -2 முதல் பாடல் வெளியாகும் தேதி அறிவிப்பு

ஈரான் அதிபா் ரய்சி பயணித்த ஹெலிகாப்டா் விபத்து

திருடப்பட்டதா எலக்சன் திரைக்கதை? எழுத்தாளர் குற்றச்சாட்டு

சைத்ரா ரெட்டியின் தருணங்கள்!

SCROLL FOR NEXT