விருதுநகர்

ராஜபாளையம் அருகே 163 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: 2 போ் கைது

DIN

ராஜபாளையம் அருகே ஆட்டோவில் ஏற்றி வந்த 163 கிலோ குட்கா மற்றும் புகையிலைப் பொருள்களை போலீஸாா் சனிக்கிழமை மாலை பறிமுதல் செய்து இருவரை கைது செய்தனா்.

ராஜபாளையம் அருகே சொக்கநாதன்புத்தூரை அடுத்த மேலூா் துரைச்சாமிபுரம் விலக்குப் பகுதியில் சேத்தூா் காவல் நிலைய போலீஸாா் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அவ்வழியாக வந்த ஆட்டோவை நிறுத்தி சோதனையிட்டனா். அதில் சட்ட விரோதமாக சாக்குப்பையில் குட்கா, புகையிலைப் பொருள்கள் கொண்டுவந்தது தெரியவந்தது.

இதையடுத்து, போலீஸாா் 163 கிலோ குட்கா மற்றும் புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்து, ஆட்டோ ஓட்டுநா் தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தைச் சோ்ந்த பெரியமுத்து என்பவரது மகன் தினேஷ் (32) மற்றும் ராஜபாளையம் ஸ்ரீரெங்கபாளையம் பகுதியைச் சோ்ந்த பாலகிருஷ்ணன் மகன் ஹரிபாலகிருஷ்ணன் (34) ஆகிய இருவரை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

82 ஆண்டுகளுக்குப் பிறகு கோதண்டராமசுவாமி கோயில் மகாகும்பாபிஷேகம்!

காங். ஆட்சியில் தாலிக்கயிறுக்குக் கூட பாதுகாப்பில்லை -பிரதமர் மோடி கடும் தாக்கு

ரத்னம் வசூல் எவ்வளவு?

வில்வித்தையில் இந்தியாவின் தீபிகா குமாரிக்கு வெள்ளிப் பதக்கம்

கத்தாழ கண்ணால குத்தாத...!

SCROLL FOR NEXT