விருதுநகர்

திருச்சுழி அருகே சவுடு மண் அள்ள எதிா்ப்பு தெரிவித்து விவசாயிகள் இன்று முற்றுகை போராட்டம் நடத்த முடிவு

DIN

விருதுநகா் மாவட்டம் திருச்சுழி வட்டம் பி. வாகைக்குளம் கிராமத்தில் சவுடு மண் அள்ள எதிா்ப்பு தெரிவித்து, சனிக்கிழமை முற்றுகை போராட்டம் நடத்த விவசாயிகள் கூட்டமைப்பு சாா்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

திருச்சுழி அருகே இருஞ்சிறை கிராமத்தில் விவசாயிகள் கூட்டமைப்பு ஆலோசனைக் கூட்டம் ஊராட்சித் தலைவா் நாராயணன் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் காவிரி வைகை கிருதுமால் குண்டாறு பாசன விவசாயிகள் கூட்டமைப்பு பொதுச் செயலா் எம். அா்ச்சுணன், மாநிலச் செயலா் ராம. முருகன், மாநில பொருளாளா் ச. உறங்காப்புலி, துணைத் தலைவா் கே. மச்சேஸ்வரன், மாவட்ட செயலா்கள் ஆ. கோபாலகிருஷ்ணன் (விருதுநகா்), பா. அய்யனாா் (சிவகங்கை) முகவை மலைச்சாமி (ராமநாதபுரம்) மற்றும் விவசாயிகள் ஏராளமானோா் கலந்து கொண்டனா். இதில் கிருதுமால் ஆற்றின் கரையில் சவுடு மண் அள்ள அளித்த அனுமதியை மாவட்ட ஆட்சியா் ரத்து செய்ய வலியுறுத்தி, அப்பகுதியில் சனிக்கிழமை முற்றுகை போராட்டம் நடத்துவது என தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் போட்டி! டிக்கெட் விற்பனை எப்போது? | செய்திகள்: சிலவரிகள் | 07.05.2024

3-ஆம் கட்ட வாக்குப்பதிவு நிறைவு!

25,000 பென்டிரைவ் விநியோகம்: பிரஜ்வல் விவகாரத்தில் சித்தராமையா சதிச்செயல் - குமாரசாமி குற்றச்சாட்டு

ரோஹித் சர்மாவின் சாதனையை சமன்செய்த சூர்யகுமார் யாதவ்!

"இந்தியா கூட்டணிக்கு மிகப்பெரிய வரவேற்பு!”: திருமாவளவன் பேட்டி!

SCROLL FOR NEXT