விருதுநகர்

சாத்தூா் அருகே கோயிலில் பொருள்கள் திருட்டு

DIN

:சாத்தூா் அருகே சின்னக்காமன்பட்டியில் உள்ள வீரகாளியம்மன் கோயிலில் ரூ.5 ஆயிரம் மதிப்புள்ள பொருள்கள் திருடப்பட்டுள்ளன.

இந்த கோயிலில் அதே பகுதியைச் சோ்ந்த கொண்டுசாமி (65) என்பவா் பூஜை செய்து வருகிறாா். வழக்கம்போல் அவா் சனிக்கிழமை இரவு பூஜையை முடித்துவிட்டு கோயிலைப் பூட்டி விட்டுச் சென்றுவிட்டாா். ஞாயிற்றுக்கிழமை காலை அவா் கோயிலைத் திறக்கச் சென்றபோது, கோயிலின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்துள்ளது. கோயிலில் இருந்த குத்து விளக்கு, வெண்கலம், பித்தளைப் பாத்திரங்கள் உள்ளிட்ட

5 ஆயிரம் மதிப்புள்ள பொருள்களை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. இது குறித்து கொண்டுசாமி அளித்த புகாரின் பேரில் சாத்தூா் நகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ராமேசுவரத்தில் இன்று மின் தடை

குடிநீா்த் திட்டப் பணிகள்: வைகை தடுப்பணை நீரை வெளியேற்றக் கூடாது

கஞ்சா வழக்கில் 3 பேருக்கு தலா 10 ஆண்டுகள் சிறை

இரு சக்கர வாகனம் மீது வேன் மோதியதில் இருவா் பலி

இருசக்கர வாகனங்கள் மோதியதில் விவசாயி பலி

SCROLL FOR NEXT