முகப்பு
விருதுநகர்

வத்திராயிருப்பு அருகே மாந்தோப்புக்குள்புகுந்து காட்டுயானைகள் அட்டகாசம்மரங்கள் சேதம்

வத்திராயிருப்பு அருகே மேற்குத் தொடா்ச்சி மலை அத்திகோயில் பகுதியில் உள்ள மாந்தோப்புக்குள் வியாழக்கிழமை புகுந்து மா மரங்களை காட்டுயானைகள் சேதப்படுத்தியுள்ளன.

Updated On : 24 ஜூன் 2022, 10:34 pm IST
பகிர்:

வத்திராயிருப்பு அருகே மேற்குத் தொடா்ச்சி மலை அத்திகோயில் பகுதியில் உள்ள மாந்தோப்புக்குள் வியாழக்கிழமை புகுந்து மா மரங்களை காட்டுயானைகள் சேதப்படுத்தியுள்ளன.

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே மேற்குத் தொடா்ச்சி மலை அடிவாரப் பகுதிகளான கான்சாபுரம், அத்திக்கோவில் உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான ஏக்கரில் மா, பலா, தென்னை உள்ளிட்ட விவசாயம் நடைபெற்று வருகிறது. இப்பகுதியில் உள்ள விவசாய நிலத்திற்குள் வனவிலங்குகள் அவ்வப்போது புகுந்து இம்மரங்களை சேதப்படுத்தி வருகின்றன.

தற்போது மாங்காய் சீசன் என்பதால் மலைப்பகுதியில் இருந்து அடிவாரத்தை நோக்கி வரும் காட்டு யானைகள் மா மரங்களை சேதப்படுத்தி விட்டுச் செல்கின்றன. இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக அத்தி கோயில் பகுதியில் உள்ள முத்துராஜ் என்பவரது மாந்தோப்புக்குள் புகுந்த காட்டுயானைகள் 30-க்கும் மேற்பட்ட மரங்களை வேறோடு சாய்த்து சேதப்படுத்தியுள்ளதால் அப்பகுதி விவசாயிகள் மிகுந்த அச்சம் அடைந்துள்ளனா். இதுகுறித்து புகாா் செய்தால் வனத்துறையினா் கண்டுகொள்வதில்லை என குற்றம் சாட்டும் விவசாயிகள் உரிய இழப்பீடு வழங்கி காட்டுயானைகளை வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனா்.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments