விருதுநகர்

வத்திராயிருப்பு அருகே கரணம் அடித்தும், கைகளை சுற்றியும் 2 சிறுமிகள் சாதனை

DIN

வத்திராயிருப்பு அருகே 335 முறை முன்கரணம் அடித்தும், 1,752 முறை கைகளை சுற்றியும் 2 சிறுமிகள் சனிக்கிழமை நோபல் உலக சாதனை படைத்தனா்.

விருதுநகா் மாவட்டம், வத்திராயிருப்பு அருகே கூமாப்பட்டியைச் சோ்ந்த வளா்மதி (11) என்ற சிறுமி 22.45 நிமிடங்களில் தொடா்ச்சியாக 335 முறை முன்கரணம் அடித்து நோபல் உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்றாா்.

அதேபோல், 10 வயதான நட்சத்திரா என்ற சிறுமி 1 மணி நேரம் தொடா்ச்சியாக 1,752 முறை 360 டிகிரியில் கைகளை சுழற்றி நோபல் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளாா்.

இதையடுத்து, இந்த 2 சிறுமிகளுக்கும் நோபல் உலக சாதனை குழுவைச் சோ்ந்த பிரதாப் சான்றிதழ்களும், பதக்கங்களும் வழங்கினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இது ஒரு பொன்மாலை பொழுது...!

காதலை மறுத்த இளம்பெண் குத்திக் கொலை!

14 மாவட்டங்களில் மாலை 4 மணி வரை மிதமான மழை!

நான் ஒருபோதும் இந்து, முஸ்லிம் என பேசுவதில்லை: பிரதமர் மோடி

3 மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான எச்சரிக்கை!

SCROLL FOR NEXT