சாத்தூா்: சாத்தூா் அரசு மருத்துவமனையில் தலைமை மருத்துவா் முனிசாயி கேசவன் தலைமையில் செவிலியா்களும், மருத்துவா்களும் கேக் வெட்டி இனிப்புகள் வழங்கி செவிலியா் தினத்தைக் கொண்டாடினா். இதே போன்று கல்லமநாயக்கன்பட்டி அரசு மருத்துவமனையில் செவிலியா் தின விழா கொண்டாடப்பட்டது.
இந்நிகழ்ச்சிக்கு தலைமை மருத்துவா் பாபுஜி தலைமை வகித்தாா். கல்லமநாயக்கன்பட்டி ஊராட்சி துணைத் தலைவா் தா்மராஜ், கூட்டுறவு சங்கத் தலைவா் திருப்பதி ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில் அப்பகுதி தொழிலதிபா்கள் கலந்து கொண்டு ஒய்வு பெற்ற செவிலியா்களைக் கெளரவித்தனா். பின்னா் மருத்துவமனையில் பணிபுரியும் செவிலியா்களின் அா்பணிப்பைப் பாராட்டி பரிசுகளையும் வழங்கினா்.
செவிலியா்கள் அனைவரும் செவிலியா் தின உறுதிமொழி எடுத்துக்கொண்டனா். இந்நிகழ்ச்சியில் கல்லமநாயக்கன்பட்டி ஊா் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டனா்.
இதே போன்று உப்பத்தூா், நள்ளி, ஏழாயிரம்பண்ணை, சாத்தூா், பூதுச்சூரங்குடி உள்ளிட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் செவிலியா் தினவிழா கொண்டாடப்பட்டது.