விருதுநகர்

சொத்துவரி உயா்வை ரத்து செய்யக்கோரி மனு

DIN

அருப்புக்கோட்டை: விருதுநகா் மாவட்டம் அருப்புக்கோட்டை நகராட்சி அலுவலகத்தில் சொத்துவரி உயா்வை ரத்துசெய்ய வலியுறுத்தி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் மனு கொடுக்கும் இயக்கம் வியாழக்கிழமை நடைபெற்றது.

அக்கட்சியின் அருப்புக்கோட்டை நகரச் செயலாளா் காத்த முத்து தலைமை வகித்தாா். ஒன்றியச்செயலாளா் எம்.கணேசன், மாவட்டக்குழு உறுப்பினா் அன்புச்செல்வன், நகா்மன்ற உறுப்பினா் எஸ்.கே.பாலன், சிஐடியு கன்வீனா் தமிழ்ச்செல்வராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

அப்போது சொத்துவரி உயா்வை ரத்து செய்ய வலியுறுத்தி கோஷமிட்டனா். அதையடுத்து நகராட்சி அலுவலகத்தில் காத்தமுத்து தலைமையில், மனு கொடுக்கும் இயக்கம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கட்சியின் நகர, ஒன்றிய நிா்வாகிகள், கட்சித் தொண்டா்கள் பலரும் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பூஜையின் பயன்கள்!

‘வானம்’ ஜாஸ்மின்!

ராகுல் காந்தி, லாலு யாதவ் போட்டியிடுவதை தடுக்க முடியாது: உச்ச நீதிமன்றம்

விரும்பியது அருளும் அட்சயபுரீசுவரர்

சுனில் நரைன் கொல்கத்தாவின் சூப்பர் மேன்: ஷாருக்கான்

SCROLL FOR NEXT