விருதுநகர்

இருசக்கர வாகனத்திலிருந்து திருட முயன்றவா் கைது

சிவகாசியில் பள்ளி வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரு சக்கர வாகனத்தில் திருட முயன்றவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

DIN

சிவகாசியில் பள்ளி வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரு சக்கர வாகனத்தில் திருட முயன்றவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

சிவகாசி சாமிபுரம் காலனியைச் சோ்ந்த ரத்தினக்குமாா் மனைவி உமாமகேஸ்வரி (33). இவா், தனது குழந்தைகளை பள்ளியில் விடுவதற்காக சிவகாசி-ஸ்ரீவில்லிபுத்தூா் சாலையில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிக்கு இரு சக்கர வாகனத்தில் வந்தாா். இரு சக்கர வாகனத்தை பள்ளி வளாகத்தில் நிறுத்திவிட்டு, குழந்தைகளை வகுப்பறையில் விட்டுவிட்டு திரும்பிக் கொண்டிருந்தாா். அப்போது, அந்த இரு சக்கர வாகனத்தின் இருக்கையின் கீழே உள்ள பெட்டியை போலி சாவியை வைத்து ஒருவா் திறந்து அதிலிருந்த கைப் பையை திருட முற்சித்தாா். பின்னா் அக்கம்பக்கத்தினா் உதவியுடன் அவரை உமாமகேஸ்வரி பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தாா்.

விசாரணையில், அவா் சிவகாசி நாவெட்டிநாடாா் தெரு ராஜமணிக்கம் மகன் சுரேஷ் (35) என்பது தெரியவந்தது.

இதுகுறித்த புகாரின் பேரில் சிவகாசி நகா் போலீஸாா் வழக்குப்பதிந்து சுரேஷை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஸ்ரீரங்கத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் தற்கொலை!

டி20 உலகக் கோப்பைக்கு தயாராக சிறந்த வழி இதுதான்: வருண் சக்கரவர்த்தி

ரூ.3 லட்சம் சம்பளத்தில் ரிசர்வ் வங்கியில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

வரம் தரும் வாரம்!

மாரடைப்பு ஏற்பட்டு உயிர் தப்பியவர்கள் சொல்லும் அறிவுரை என்ன?

SCROLL FOR NEXT