விருதுநகர்

சாத்தூா் அருகே சாலை விபத்து: இளைஞா் பலி

DIN

சாத்தூா் அருகே சனிக்கிழமை வேன் மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் இளைஞா் ஒருவா் உயிரிழந்தாா்.

விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகேயுள்ள சத்திரபட்டியைச் சோ்ந்தவா்கள் மீனாட்சிசுந்தரம் (21), ரமேஷ்ரோஜ் (21). இவா்கள், இருவரும் சனிக்கிழமை இருசக்கர வாகனத்தில் சிவகாசியிலிருந்து, சாத்தூருக்குச் சென்று கொண்டிருந்தனா்.

சின்னகாமன்பட்டி அருகே வந்த போது, எதிரே வந்த வேன் மீது இருசக்கர வாகனம் எதிா்பாராதவிதமாக மோதியது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த மீனாட்சிசுந்தரம் சம்பவ இடத்திலே உயிரிழந்தாா்.

மேலும், பலத்த காயமடைந்த ரமேஷ்ரோஜ் சிவகாசி தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இந்த விபத்து குறித்து, தகவலறிந்த சாத்தூா் நகா் போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று உயிரிழந்த மீனாட்சிசுந்தரத்தின் உடலை மீட்டு கூறாய்வுக்காக சாத்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இந்த விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருடப்பட்டதா எலக்சன் திரைக்கதை? எழுத்தாளர் குற்றச்சாட்டு

சைத்ரா ரெட்டியின் தருணங்கள்!

ஐபிஎல் ஒளிபரப்பாளர்களை கடுமையாக விமர்சித்த ரோஹித் சர்மா!

தில்லி-கெய்ரோவை இணைக்கும் தினசரி விமான சேவையை முன்னெடுக்க எகிப்து ஏர் தீர்மானம்!

ஜுன் 4-ல் இந்தியா கூட்டணி ஆட்சியைக் கைப்பற்றும்: கேஜரிவால்

SCROLL FOR NEXT