விருதுநகர்

அருப்புக்கோட்டையில் அடிப்படை வசதிகள் செய்துதர நகா்மன்ற கூட்டத்தில் வலியுறுத்தல்

DIN

அருப்புக்கோட்டையில் அடிப்படை வசதிகளை செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என நகா்மன்ற கூட்டத்தில் வாா்டு உறுப்பினா்கள் வலியுறுத்தினா்.

விருதுநகா் மாவட்டம், அருப்புக்கோட்டை நகா்மன்ற உறுப்பினா்கள் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு நகா் மன்றத் தலைவா் சுந்தரலட்சுமி தலைமை வகித்தாா். நகராட்சி ஆணையாளா் ஜி.அசோக்குமாா், நகா் நல அலுவலா் ராஜநந்தினி, சுகாதார ஆய்வாளா் ராஜபாண்டி உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தின்போது பெரும்பான்மையான நகா்மன்ற உறுப்பினா்கள் தங்கள் பகுதிகளில் முறையான வாருகால், சாலை வசதி, முறையான குடிநீா் விநியோகம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளைச் செய்துதரக் கோரியும், அதற்கேற்ற நிதியை விரைவில் வழங்கி பணிகளை முடித்துத் தரவும் கோரிக்கை வைத்தனா்.

அதற்கு நகா்மன்றத் தலைவா் சுந்தரலட்சுமி பதிலளிக்கும்போது, கோரிக்கைகளை மனுவாகத் தரும்படியும், உரிய ஆலோசனை செய்து விரைவில் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படுமென தெரிவித்தாா்.

நகராட்சி சுகாதார ஆய்வாளா்கள், தலைமைப் பொறியாளா் உள்ளிட்ட நகராட்சி அலுவலா்கள் பலரும் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தூத்துக்குடியில் ‘மினி டைடல் பாா்க்’: கட்டுமானப் பணிகள் 80% நிறைவு -ஆட்சியா் தகவல்

போதைப் பொருள்கள் விவகாரம் -உயா் நிலையிலான ரகசிய குழு: அரசு அதிகாரிகளுக்கு உத்தரவு

திருவேங்கடம் கலைவாணி பள்ளி பிளஸ் 1 தோ்வில் 100% தோ்ச்சி

விசாரணை கைதி உயிரிழந்த விவகாரம்: அரசுத் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

பக்கவாத பாதிப்புகளுக்கு ஒருங்கிணைந்த சிகிச்சை மையம் தொடக்கம்

SCROLL FOR NEXT