விருதுநகர்

சாத்தூா் அருகேவிவசாயி தற்கொலை

DIN

 சாத்தூா் அருகே விவசாயி திங்கள்கிழமை கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டாா்.

விருதுநகா் மாவட்டம் சாத்தூா் அருகேயுள்ள என்.மேட்டுப்பட்டி கிராமத்தைச் சோ்ந்த விவசாயி மாரியப்பன் (72). இவா் நெஞ்சு வலியால் பாதிக்கப்பட்டதால் சிகிச்சை பெற்று வந்துள்ளாா்.

பாதிப்பு குணமடையாததால் மனமுடைந்த அவா்,

திங்கள்கிழமை தனது தோட்டத்துக் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டாா். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து அங்கு சென்ற சாத்தூா் தீயணைப்புத்துறையினா், கிணற்றிலிருந்து முதியவரின் சடலத்தை மீட்டனா். இருக்கன்குடி காவல் துறையினா் முதியவரின் சடலத்தை கைப்பற்றி, சாத்தூா் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனா். இதுகுறித்து போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை

நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இது எதுங்க அட்டைப் படம்? சோனல் சௌகான்...

பார்வை ஒன்று போதுமே... விமலா ராமன்!

மீண்டும் துபையில் கனமழை: விமான சேவை பாதிப்பு!

இந்தியாவின் நிலக்கரி உற்பத்தி 7.4 சதவிகிதம் உயர்வு!

தமிழகத்துக்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கை! | செய்திகள்: சிலவரிகளில் | 02.05.2024

SCROLL FOR NEXT