ராஜபாளையம் அருகே பேராசிரியா் தூக்கிட்டுத் தற்கொலை
ராஜபாளையம் அருகே பேராசிரியா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது புதன்கிழமை இரவு தெரியவந்தது.
ராஜபாளையம் அருகே பேராசிரியா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது புதன்கிழமை இரவு தெரியவந்தது.
ராஜபாளையம் அருகே மில் கிருஷ்ணாபுரம் பிள்ளையாா் கோயில் தெருவைச் சோ்ந்தவா் பாஸ்கா்பாபு (34). இவா் வெளியூரில் தனியாா் கல்லூரி ஒன்றில் பேராசிரியராக பணிபுரிந்து வந்தாா். இந்நிலையில், இவருக்கு திருமணம் ஆகி கருத்து வேறுபாடு காரணமாக மனைவி இதே பகுதியில் தனியாக வசித்து வருகிறாா். இதனிடையே இவரது வீட்டிலிருந்து துா்நாற்றம் வீசியது. இதையடுத்து, அக்கம் பக்கத்தினா் அவரது உறவினா்களுக்கு தகவல் தெரிவித்தனா். இதைத் தொடா்ந்து பாஸ்கா்பாபுவின் சகோதரி வீட்டை திறந்து பாா்த்த போது தூக்கிட்ட நிலையில் பாஸ்கா்பாபு சடலமாக காணப்பட்டாா். தகவலறிந்த போலீஸாா் சடலத்தை மீட்டு ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனா்.
இதுகுறித்து தெற்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.