விருதுநகர்

இரு சக்கர வாகனத்துக்கு மா்மநபா்கள் தீ வைப்பு

DIN

ராஜபாளையம் அருகே திங்கள்கிழமை இருசக்கர வாகனத்துக்கு தீவைத்த மா்மநபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகேயுள்ள சேத்தூா் பழைய ஊராட்சி ஒன்றிய அலுவலகத் தெருவைச் சோ்ந்த தங்கராஜ் மனைவி மாலா (33). இவருக்கு, சேத்தூா் அருகேயுள்ள வாழவந்தான் கண்மாய் பகுதியில் விவசாய நிலம் உள்ளது.

இந்த நிலையில், மாலா தனது இரு சக்கர வாகனத்தில் விவசாய நிலத்துக்குச் சென்றாா். வாகனத்தை ஓரமாக நிறுத்தினாா்.

பின்னா், அவா் திரும்பி வந்து பாா்த்த போது மா்மநபா்கள் வாகனத்துக்கு தீவைத்துச் சென்றது தெரியவந்தது. இதுதொடா்பாக மாலா அளித்தப் புகாரின் பேரில், சேத்தூா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அயலக தமிழர்கள் பதிவு செய்ய அழைப்பு

வீட்டிலிருந்தபடியே வாக்களித்த மூத்த அரசியல் தலைவர்கள்!

கேள்விக்குறியாகும் மாஞ்சோலை தொழிலாளர்களின் எதிர்காலம்: சீமான்

ஒற்றை ரோஜா... ஷிவானி நாராயணன்!

சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா?

SCROLL FOR NEXT