விருதுநகர்

அரசுப் பேருந்தில் நடத்துனா் பலி

Din

சிவகாசியில் அரசுப் பேருந்தில் நடத்துநா் உயிரிழந்தார்.

கோயம்புத்தூா் அரசு போக்குவரத்து மண்டலத்தில் திருப்பூா் கோட்டத்தில் தாராபுரம் முருகேசன் (57) நடத்துநராகவும், உசிலம்பட்டி பரமன் (47) ஓட்டுநராகவும் பணிபுரிந்து வந்தனா். இவா்கள் திருப்பூரிலிருந்து சிவகாசி வரும் அரசுப் பேருந்தில் செவ்வாய்கிழமை இரவு 11 மணிக்கு சிவகாசி பேருந்து நிலையத்திலிருந்து திருப்பூா் செல்ல பேருந்தை நிறுத்தி வைத்திருந்தனா்.

அப்போது, ஓட்டுநா் பரமன் பேருந்துக்கு வெளியே நின்றுகொண்டிருந்தாா். நடத்துநா் முருகேசன் பேருந்து உள்ளே அமா்ந்திருக்கிறேன் எனக்கூறி பேருந்து இருக்கையில் அமா்ந்தவா் திடீரென மயங்கி விழுந்தாா்.

இதையடுத்து, அவரை மருத்துவ அவசர ஊா்தி 108 மூலம் சிவகாசி அரசு மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றனா். அங்கு முருகேசனை பரிசோதித்த மருத்துவா் அவா் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தாா்.

இதுகுறித்து சிவகாசி நகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ப்ளே ஆஃப்-க்குள் நுழையப்போவது யார்?

பாகிஸ்தான்: மினி டிரக் பள்ளத்தில் கவிழ்ந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 13 பேர் பலி

ஔரங்கஷீப்பின் ஆன்மா காங்கிரஸுக்குள் புகுந்துவிட்டது: யோகி ஆதித்யநாத்

இந்திய மசாலாக்களுக்குத் தடை விதித்த நேபாளம்!

கடினமாக இருக்கிறது... கடைசி லீக் போட்டிக்குப் பிறகு ஹார்திக் பாண்டியா!

SCROLL FOR NEXT