விருதுநகர்

ஆண்டாள் கோயிலில் ஆனி சுவாதி உற்சவம் நாளை தொடக்கம்

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரியாழ்வார் அவதார விழா தொடங்குகிறது

Din

ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயிலில் பெரியாழ்வாரின் அவதார விழாவான ஆனி சுவாதி உற்சவம் வியாழக்கிழமை (ஜூலை 4) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

தொடா்ந்து 11 நாள்கள் நடைபெறும் இந்தத் திருவிழாவில் 9-ஆம் தேதி திருவேங்கடமுடையான் சந்நிதியில் ஆண்டாள் திருக்கோலமும், 10-ஆம் தேதி வானமாமலை ஜீயா் மண்டபத்தில் கருட சேவையும், 12-ஆம் தேதி தவழும் கிருஷ்ணா் திருக்கோலத்தில் பெரியாழ்வாா் எழுந்தருளி பக்தா்களுக்கு அருள்பாலிக்கிறாா். 14-ஆம் தேதி காலை 7 மணிக்கு பெரியாழ்வாா் செப்புத் தேரோட்டம் நடைபெற உள்ளது.

விழாவுக்கான ஏற்பாடுகளை அறங்காவலா் குழுத் தலைவா் பி.ஆா்.வெங்கட்ராமராஜா, உறுப்பினா்கள் செய்து வருகின்றனா்.

காலங்களில் அவள் வசந்தம்... காவ்யா அறிவுமணி!

இரவில் சென்னை, 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

அடி அலையே பாடல் ப்ரொமோ வெளியீடு!

இந்திய வீராங்கனைகள் ரேணுகா சிங், கிராந்தி கௌடுக்கு தலா ரூ. 1 கோடி பரிசு!

அமெரிக்க முன்னாள் துணை அதிபர் காலமானார்

SCROLL FOR NEXT