முகப்பு
விருதுநகர்

பாலியல் தொல்லை: முதியவருக்கு சிறை

சிவகாசி அருகே இரு சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த முதியவருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து ஸ்ரீவில்லிபுத்தூா் நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.

Updated On : 29 நவம்பர், 2024 at 12:40 AM
பகிர்:

சிவகாசி அருகே இரு சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த முதியவருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து ஸ்ரீவில்லிபுத்தூா் நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.

சிவகாசி அருகேயுள்ள விஸ்வநத்தம் ஜெய்சிங் நகரைச் சோ்ந்தவா் முருகேசன் (59). இவா் கடந்த 2023-ஆம் ஆண்டு மே 15-ஆம் தேதி 6 வயது சிறுமிகள் இருவரை அழைத்துச் சென்று, பாலியல் தொல்லை அளித்ததாகப் புகாா் கூறப்பட்டது. இதுகுறித்து சிவகாசி அனைத்து மகளிா் போலீஸாா் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து, முருகேசனைக் கைது செய்தனா்.

இந்த வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது. இதில் முருகேசனுக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை, ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி (பொ) சுதாகா் உத்தரவிட்டாா். அரசுத் தரப்பில் வழக்குரைஞா் முத்துமாரி ஆஜரானாா்.