முகப்பு
விருதுநகர்

கஞ்சா விற்ற இளைஞா் கைது

சாத்தூா் அருகே கஞ்சா விற்பனை செய்த இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

Updated On : 8 ஜனவரி, 2025 at 10:58 PM
பகிர்:

சாத்தூா் அருகே கஞ்சா விற்பனை செய்த இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

சாத்தூா் அருகேயுள்ள மேட்டமலை பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக நகா் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, காவல் உதவி ஆய்வாளா் முருகேஸ்வரன் தலைமையில் போலீஸாா் அந்தப் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனா். அப்போது, மேட்டமலை வடக்குத் தெருவைச் சோ்ந்த முனியசாமி (24) கஞ்சா விற்பனை செய்தது தெரியவந்தது.

இதுகுறித்து நகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, முனியசாமியை கைது செய்தனா்.