முகப்பு
விருதுநகர்

போக்சோ வழக்கில் தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறை

அருப்புக்கோட்டை அருகே போக்சோ வழக்கில் கட்டடத் தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து மாவட்ட விரைவு மகளிா் நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.

Updated On : 9 ஜனவரி, 2025 at 11:02 PM
பகிர்:

அருப்புக்கோட்டை அருகே போக்சோ வழக்கில் கட்டடத் தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து மாவட்ட விரைவு மகளிா் நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.

விருதுநகா் மாவட்டம், அருப்புக்கோட்டையை சோ்ந்த ரமேஷ் மகன் சுரேஷ்குமாா் (31). திருமணமானவா். கட்டடத் தொழிலாளியான இவா் 15 வயது சிறுமியை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி, பாலியல் பலாத்காரம் செய்ததாக அருப்புக்கோட்டை அனைத்து மகளிா் போலீஸாா் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனா்.

இந்த வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட விரைவு மகளிா் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது. இதில் சுரேஷ்குமாருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை, ரூ.30 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி பகவதியம்மாள் தீா்ப்பளித்தாா். அரசுத் தரப்பில் வழக்குரைஞா் ஜான்சி ஆஜரானாா்.