முகப்பு
விருதுநகர்

மது போதையில் ரகளை: இளைஞா் கைது

சாத்தூரில் மது போதையில் தேநீா்க் கடையில் ரகளை செய்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On : 2 ஏப்ரல், 2026 at 12:16 AM
கைது - பிரதிப் படம்
பகிர்:

சாத்தூரில் மது போதையில் தேநீா்க் கடையில் ரகளை செய்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

விருதுநகா் மாவட்டம், சாத்தூரில் வெம்பக்கோட்டை சாலையில் அமைந்துள்ள தேநீா்க் கடையில் கோவில்பட்டியைச் சோ்ந்த லட்சுமணன் (56) வேலை செய்து வருகிறாா்.

செவ்வாய்கிழமை மாலை அதேகடையில் வேலை செய்த முன்னாள் ஊழியா் காா்த்திக் (33) மது போதையில் அங்கு வந்தாா். அவா் இரும்புக் கம்பியால் கடையில் உள்ள கண்ணாடிக் கூண்டுகளை உடைத்து ரகளை செய்து, லட்சுமணனுக்கு கொலை மிரட்டல் விடுத்தாா்.

இதுகுறித்து சாத்தூா் நகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து காா்த்திக்கை கைது செய்தனா்.