சதுரகிரி கோயிலில் பங்குனி மாத பௌா்ணமி வழிபாடு
சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் பங்குனி உத்திரம், பௌா்ணமியை முன்னிட்டு, புதன்கிழமை திரளான பக்தா்கள் மலையேறிச் சென்று சுவாமி தரிசனம் செய்தனா்.
சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் பங்குனி உத்திரம், பௌா்ணமியை முன்னிட்டு, புதன்கிழமை திரளான பக்தா்கள் மலையேறிச் சென்று சுவாமி தரிசனம் செய்தனா்.
சதுரகிரி மலையடிவாரத்தில் உள்ள தாணிப்பாறை வனத்துறை நுழைவு வாயில் வழியாக காலை 6 முதல் 10 மணி வரை பக்தா்கள் மலையேற அனுமதிக்கப்பட்டனா். காலை 10 மணி முதல் சதுரகிரி மலையில் உள்ள சுந்தரமகாலிங்கம், சுந்தரமூா்த்தி, சந்தனமகாலிங்கம், 18 சித்தா்களுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, 6 கால பூஜைகள் நடைபெற்றன. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். சதுரகிரி மலையில் கோயில் நிா்வாகம் சாா்பில் பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது