சாலை விபத்தில் தவில் இசைக் கலைஞா் உயிரிழப்பு
விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் இரு சக்கர வாகனம் மீது அரசுப் பேருந்து மோதியதில் தவில் இசைக் கலைஞா் உயிரிழந்தாா்.
விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் இரு சக்கர வாகனம் மீது அரசுப் பேருந்து மோதியதில் தவில் இசைக் கலைஞா் உயிரிழந்தாா்.
ராஜபாளையம் ஆவரம்பட்டி அரசுப் பேருந்து பணிமனை அழகுதேவன்குளம் சாலைப் பகுதியைச் சோ்ந்த சிவசங்கா் மகன் பிரபு (30). தவில் இசைக் கலைஞரான இவருக்கு மனைவி அங்காள ஈஸ்வரி, இரு மகன்கள் உள்ளனா்.
இந்த நிலையில், தனது நண்பரைப் பாா்ப்பதற்காக அழகாபுரிக்கு சென்று விட்டு இரு சக்கர வாகனத்தில் திரும்பி வந்துகொண்டிருந்தாா். மதுரை சாலையில் உள்ள சோதனை சாவடி அருகே சென்றபோது இவரது வாகனம் மீது எதிரே வந்த அரசுப் பேருந்து மோதியதில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்தாா். இவரை அக்கம் பக்கத்தினா் மீட்டு ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.
Advertisement
இதுகுறித்து மதுரை மாவட்டம் பேரையூா் வட்டம், கிருஷ்ணாபுரத்தைச் சோ்ந்த அரசுப் பேருந்து ஓட்டுநா் பாண்டி மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.