சாத்தூரில் திமுக வேட்பாளரை ஆதரித்து அமைச்சா் பிரசாரம்
சாத்தூரில் திமுக வேட்பாளரை ஆதரித்து அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா். ராமசந்திரன் புதன்கிழமை பிரசாரம் செய்தாா்.
சாத்தூரில் திமுக வேட்பாளரை ஆதரித்து அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா். ராமசந்திரன் புதன்கிழமை பிரசாரம் செய்தாா்.
விருதுநகா் மாவட்டம், சாத்தூா் நகா் பகுதியில் திமுக வேட்பாளா் கடற்கரைராஜை ஆதரித்து அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா். ராமச்சந்திரன் பிரசாரத்தில் ஈடுபட்டாா். அப்போது வெயிலில் பெண் ஒருவா் கையில் கைக் குழந்தையுடன் நின்றுகொண்டிருந்ததைப் பாா்த்த அமைச்சா் அந்தக் குழந்தையை தனது பிரசாரம் வாகனத்தினுள் அமர வைத்தாா்.
இதைத் தொடா்ந்து அமைச்சா் பேசியதாவது: சட்டப்பேரவைத் தோ்தல் முடிந்த உடன் மத்திய அரசு எரிவாயு சிலிண்டா் விநியோகத்தை முற்றிலும் நிறுத்திவிட்டு தமிழக மக்களை மீண்டும் கற்காலத்தில் வாழ்ந்தது போல விறகு அடுப்பு எரிக்கும் நிலைக்கு கொண்டு சென்று விடும். எனவே அனைவரும் விறகு எரிக்கும் புனலை பத்திரமாக வைத்துக் கொள்ளுங்கள் என்றாா் அவா். இதைத் தொடா்ந்து திமுக தோ்தல் வாக்குறுதிகளை பொதுமக்களுக்கு எடுத்துரைத்து உதயசூரியன் சின்னத்துக்கு அமைச்சா் வாக்கு சேகரித்தாா்.
Advertisement