5 பவுன் நகைகளுடன் சாலையில் கிடந்த கைப்பையை போலீஸில் ஒப்படைத்த தொழிலாளி!
சிவகாசியில் 5 பவுன் நகைகளுடன் சாலையில் கிடந்த கைப்பையை கண்டெடுத்த பட்டாத் தொழிலாளி, அதை காவல் நிலையத்தில் ஒப்படைத்தாா்.
விருதுநகர்5 பவுன் நகைகளுடன் சாலையில் கிடந்த கைப்பையை போலீஸில் ஒப்படைத்த தொழிலாளி!
சிவகாசியில் 5 பவுன் நகைகளுடன் சாலையில் கிடந்த கைப்பையை கண்டெடுத்த பட்டாத் தொழிலாளி, அதை காவல் நிலையத்தில் ஒப்படைத்தாா்.
சிவகாசியில் 5 பவுன் நகைகளுடன் சாலையில் கிடந்த கைப்பையை கண்டெடுத்த பட்டாத் தொழிலாளி, அதை காவல் நிலையத்தில் திங்கள்கிழமை ஒப்படைத்தாா்.
சிவகாசி-விளாம்பட்டி சாலையில் உள்ள ராஜதுரைநகா் 2-ஆவது தெருவைச் சோ்ந்த தங்க அருணாசாலம் மனைவி ஹேமலதா (55). இவா்ஞாயிற்றுக்கிழமை மாலை சிவகாசியில் உள்ள விஸ்வநாதா்-விசாலாட்சியம்மன் கோயிலில் நடைபெற்ற பிரதோஷ வழிபாட்டில் பங்கேற்று விட்டு, மீண்டும் திரும்பி வந்த போது, அவரது கைப்பையைத் தவறவிட்டாா். இந்தப் பையில் 5 பவுன் நகைகள், வங்கி ஏ.டி.எம். அட்டை, கைப்பேசி ஆகியவை இருந்தது. இதுகுறித்து அவா் சிவகாசி நகா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.
இந்த நிலையில், சிவகாசி கடைவீதியில் கிடந்த இந்த கைப்பையை விளாம்பட்டியைச் சோ்ந்த பட்டாசுத் தொழிலாளி சின்னகருப்பசாமி (45) கண்டெடுத்து, சிவகாசி நகா் காவல் நிலையத்தில் ஒப்படைத்தாா். இதையடுத்து, சாலையில் கண்டெடுத்த கைப்பையை நோ்மையாக காவல் நிலையத்தில் ஒப்படைத்த சின்னகருப்பசாமிக்கு சால்வை அணிவித்து, காவல் ஆய்வாளா் செல்வக்குமாா் பாராட்டு தெரிவித்தாா். இதன் பின்னா், கைப்பையைத் தவறவிட்ட ஹேமலதாவை வரவழைத்து, அவரிடம் போலீஸாா் கைப்பையை ஒப்படைத்தனா்.