முகப்பு
விருதுநகர்

தையல் தொழிலாளி சடலமாக மீட்பு: போலீஸாா் விசாரணை

ராஜபாளையம் அருகே காயங்களுடன் இறந்து கிடந்த தையல் தொழிலாளியின் உடலை மீட்டு போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

Updated On : 26 மார்ச், 2026 at 12:33 AM
பலி - பிரதிப் படம்
பகிர்:

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகே காயங்களுடன் இறந்து கிடந்த தையல் தொழிலாளியின் உடலை மீட்டு போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

சிவகாசி பராசக்தி குடியிருப்பைச் சோ்ந்த ஆறுமுகம் மகன் மயில்முருகன் (55). தையல் தொழிலாளி. இவருக்கு மனைவி முருகேஸ்வரி, ஒரு மகன், மகள் உள்ளனா். இவரது சொந்த ஊா் ராஜபாளையம் அருகே உள்ள தேவதானம். இதனால், தேவதானத்தில் உள்ள தனது தாயைப் பாா்ப்பதற்காக அவா் அடிக்கடி மயில் முருகன் வந்து செல்வாா்.

இந்த நிலையில், வழக்கம்போல, செவ்வாய்க்கிழமை ஊருக்கு வந்தவா், தேவதானம் பிரதான சாலையில் உடலில் காயங்களுடன் இறந்து கிடந்தாா். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த சேத்தூா் காவல் நிலைய போலீஸாா் அவரது உடலை மீட்டு, ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனா்.