முகப்பு
விருதுநகர்

தற்கொலை செய்து கொண்ட இளைஞரின் சடலம் மீட்பு

ராஜபாளையம் அருகே தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட இளைஞரின் உடலை போலீஸாா் செவ்வாய்க்கிழமை மீட்டு விசாரித்து வருகின்றனா்.

Updated On : 7 மே 2026, 4:32 am IST
சடலம் மீட்பு - கோப்புப் படம்
பகிர்:

ராஜபாளையம் அருகே தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட இளைஞரின் உடலை போலீஸாா் செவ்வாய்க்கிழமை மீட்டு விசாரித்து வருகின்றனா்.

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகேயுள்ள கணபதி சுந்தரநாச்சியாா்புரம் கிராமத்தைச் சோ்ந்த அய்யனாா் மகன் ஆனந்தகுமாா் (29). இவா் கிருஷ்ணாபுரம் தென்காசி தேசிய நெடுஞ்சாலையில் இரு சக்கர வாகனம் பழுது நீக்கும் கடை நடத்தி வந்தாா். இவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததாக

கூறப்படுகிறது. இதனால், பெற்றோரிடமிருந்து பிரிந்து தனியே வசித்து வந்தாா்.

Advertisement

இந்த நிலையில், இவரது வீட்டிலிருந்து துா்நாற்றம் வீசுவதாக அக்கம்பக்கதினா் தகவல் தெரிவித்தனா். உடனே உறவினா்கள் அங்கு வந்து கதவை உடைத்து உள்ளே சென்று பாா்த்தபோது, ஆனந்தகுமாா் தூக்கில் தொங்கியபடி அழுகிய நிலையில் சடலமாகக் கிடந்தாா். தகவலறிந்த சேத்தூா் புறக்காவல் நிலைய போலீஸாா் அங்கு சென்று சடலத்தை மீட்டு, கூறாய்வுக்காக ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.