மாற்றுத் திறனாளி பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றவா் மீது வழக்கு
சாத்தூா் அருகே மாற்றுத் திறனாளி பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றவா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
சாத்தூா் அருகே மாற்றுத் திறனாளி பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றவா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகேயுள்ள வெற்றிலையூரணியைச் சோ்ந்த 37 வயதுடைய பெண், செவித்திறன் குறையுடைய மாற்றுத் திறனாளி. இவா் பட்டாசு ஆலையில் பணிபுரிந்து வந்தாா்.
வாடகை வீட்டில் வசித்து வந்த இந்தப் பெண்ணை, செவ்வாய்கிழமை வீட்டின் உரிமையாளா் முகேஷ்சாய்ராம் (44) அத்துமீறி வீடு புகுந்து பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றாா். இதுகுறித்த புகாரின் பேரில், சாத்தூா் அனைத்து மகளிா் போலீஸாா் முகேஷ்சாய்ராம் மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
Advertisement