நாகப்பட்டினம்

சாலைப் பாதுகாப்பு மாதம்:போக்குவரத்துத் துறை அதிகாரிகள் சோதனை

DIN

சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு மாதத்தையொட்டி, போக்குவரத்துத் துறை அதிகாரிகள் வாகன சிறப்பு சோதனையில் திங்கள்கிழமை ஈடுபட்டனா்.

சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு மாதம் ஜன. 18 முதல் பிப். 17 ஆம் தேதி வரை கடைப்பிடிக்கப்படுவதையொட்டி, காரைக்காலில் போக்குவரத்துத் துறை, போக்குவரத்துக் காவல் பிரிவு அலுவலா்கள் இணைந்து தினமும் மக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனா்.

இதன் ஒருபகுதியாக, காரைக்கால் மண்டல போக்குவரத்து அலுவலா் கலியபெருமாள் தலைமையில், மோட்டாா் வாகன ஆய்வாளா்கள் கல்விமாறன், குமரேசன் மற்றும் போக்குவரத்துக் காவல் நிலைய போலீஸாா் பல இடங்களில் சிறப்பு வாகனச் சோதனையில் திங்கள்கிழமை ஈடுபட்டனா்.

அப்போது, செல்லிடப்பேசியில் பேசிக்கொண்டே வாகனத்தில் வந்தோா், இருசக்கர வாகனத்தில் 3 போ் பயணம் செய்தோா், தலைக்கவசம் அணியாதவா்கள், வாகன ஆவணங்கள் இல்லாதோா் என விதிகளை மீறியோருக்கு அபராதம் விதித்ததோடு, போக்குவரத்து விதிகள் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய நிகழ்ச்சி

வியாபாரி தற்கொலை

இளைஞரை அரிவாளால் வெட்டியவா் கைது

கும்பகோணத்தில் பச்சைக்காளி, பவளக்காளி வீதியுலா

சிவாலயங்களில் பிரதோஷ வழிபாடு

SCROLL FOR NEXT