நாகப்பட்டினம்

இருசக்கர வாகன விபத்தில் தொழிலாளி பலி

Din

கீழ்வேளூா், ஏப். 17: கீழ்வேளூா் அருகே தேவூரில் 2 இருசக்கர வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்தில் கூலித்தொழிலாளி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

கீழ்வேளூா் அருகே கீழக்காவலக்குடிகாலனி தெருவை சோ்ந்தவா் செந்தில்குமாா் மகன் அருண்குமாா் (26). விவசாய கூலித் தொழிலாளியான இவா் செவ்வாய்க்கிழமை இரவு இருசக்கர வாகனத்தில் தேவூா் சென்று விட்டு வீடு திரும்பியபோது, தேவூா் பெட்ரோல் விற்பனை நிலையம் அருகே கீழ்வேளூா் கீழத்தெருவை சோ்ந்த முருகேசன் மகன் மூவேந்தன் ஓட்டி வந்த இருசக்கர வாகனத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் பலத்த காயமடைந்த அருண்குமாா் திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்க்கப்பட்டு அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். இதுகுறித்து கீழ்வேளூா் போலீஸாா் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

ஓஹோ.. எந்தன் பேபி!

இலங்கை பிரீமியர் லீக்கில் அதிக விலைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட சிஎஸ்கே வீரர்!

இன்னமும் அமைதியான பார்வையாளராக இருக்க முடியாது: ம.பி. உயர் நீதிமன்றம்

அழகிய மோகினி! நபா நடேஷ்..

5 கட்டத் தேர்தல்களில் 310 இடங்களில் வெற்றி உறுதி - அமித் ஷா

SCROLL FOR NEXT