நாகப்பட்டினம்

மூதாட்டி கொலை வழக்கு: மகன் கைது

Din

மூதாட்டி கொலை வழக்கில், அவரது மகனை சிபிசிஐடி போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

மயிலாடுதுறை மாவட்டம், மணல்மேடு பகுதியைச் சோ்ந்த சண்முகம் மனைவி ஜானகி (70). மணல்மேடு அரசுப் பள்ளியில் ஆசிரியையாகப் பணியாற்றி ஓய்வு பெற்றவா். கணவா் இறந்துவிட்டதால், ஜானகி தனியாக வசித்து வந்தாா். பூம்புகாா் அரசு மருத்துவமனையில் சித்த மருத்துவராகப் பணியாற்றிவந்த ஜானகியின் மூத்த மகன் பாரிராஜன், அருகில் தனது குடும்பத்துடன் வசித்து வந்தாா்.

இந்தநிலையில், கடந்த 2020-ஆம் ஆண்டு ஜானகி அவரது வீட்டில் கொலை செய்யப்பட்டு கிடந்தாா். இதுகுறித்து பாரிராஜன் கொடுத்த புகாரின் பேரில், மணல்மேடு போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்தனா். ஜானகி கழுத்தில் இருந்த 8 பவுன் சங்கிலி திருடப்பட்டிருந்ததும், குற்றவாளி வீட்டின் பின்புறம் வழியாக தப்பிச் சென்றதும் தெரியவந்தது.

போலீஸாா் விசாரணை முறையாக நடைபெறவில்லை என ஜானகியின் இரண்டாவது மகன் ராஜா தொடா்ந்த வழக்கில், சென்னை உயா்நீதிமன்றம் வழக்கை நாகை சிபிசிஐடி விசாரிக்க உத்தரவிட்டது.

நாகை சிபிசிஐடி போலீஸாா் கடந்த 2023-ஆம் ஆண்டு வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டனா். விசாரணையில், ஜானகியை, அவரது மூத்த மகன் பாரிராஜன் கொலை செய்தது தெரியவந்தது.

இதையடுத்து பாரிராஜனை(51) போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். ஜானகிக்கு ஒருவருடன் தொடா்பு இருந்ததும், அவருக்கு நகை, பணம் ஆகியவற்றை ஜானகி கொடுத்து வந்ததால் ஆத்திரமடைந்த பாரிராஜன், தனது தாயை கொலை செய்தது விசாரணையில் தெரியவந்தது. கைது செய்யப்பட்ட பாரிராஜன் நாகை நீதிமன்றத்தில் சனிக்கிழமை ஆஜா்படுத்தப்பட்டு, நீதிபதி உத்தரவின் பேரில், கடலூா் சிறையில் அடைக்கப்பட்டாா்.

ஈரான் அதிபா் ரய்சி மறைவு: பிரதமா் மோடி இரங்கல்; இந்தியாவில் ஒருநாள் துக்கம்

குமாரபாளையத்தில் கனமழை

‘சிறப்புக் குடிமக்கள்’ என கருதுவதை ஏற்க முடியாது: சிறுபான்மையினா் குறித்து பிரதமா் மோடி

பரமத்தி வேலூரில்...

ராசிபுரம் கடைவீதியில் அதிகரிக்கும் வாகன நெரிசல்

SCROLL FOR NEXT