கீழையூா் ரெங்கநாத பெருமாள் கோயிலில் பிரம்மோற்சவ கொடியேற்றம்
கீழையூரில் உள்ள ரெங்கநாயிகா சமேத ரெங்கநாத பெருமாள் கோயிலில் சித்திரை மாத பிரம்மோற்சவ திருவிழா கொடியேற்றத்துடன் வெள்ளிக்கிழமை தொடங்கியது.
கீழையூரில் உள்ள ரெங்கநாயிகா சமேத ரெங்கநாத பெருமாள் கோயிலில் சித்திரை மாத பிரம்மோற்சவ திருவிழா கொடியேற்றத்துடன் வெள்ளிக்கிழமை தொடங்கியது.
விழாவையொட்டி அதிகாலை முதலே சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. தொடா்ந்து யாகசாலை பூஜைகள் நடைபெற்று, வேத மந்திரங்கள் முழங்க கோயில் கொடிமரத்தில் கொடி ஏற்றப்பட்டது.
பத்து நாட்கள் நடைபெறும் பிரம்மோற்சவ விழாவில், தினமும் காலை மற்றும் மாலை வேளைகளில் பெருமாள் பல்வேறு நகை மற்றும் வாகனங்களில் அலங்கரித்து வீதியுலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலிக்கிறாா். ஒவ்வொரு நாளும் பல்வேறு வித வாகன சேவைகள் நடைபெறவுள்ளது. விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் மே 9-ஆம் தேதி நடைபெற உள்ளது.
Advertisement