கீழையூா் பெருமாள் கோயில் சித்திரைத் தேரோட்டம்
கீழையூா் பெருமாள் கோயில் சித்திரைத் தேரோட்டம்
கீழையூரில் அருள்பாலிக்கும் ஸ்ரீ ரெங்கநாயிகா சமேத ஸ்ரீ ரெங்கநாத பெருமாள் கோயில் சித்திரை பிரம்மோற்சவத் தேரோட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
இக்கோயிலில் சித்திரை பிரம்மோற்சவம் மே 1-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10 நாள்கள் நடைபெறும் இவ்விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் விமரிசையாக நடைபெற்றது.
இதையொட்டி, சிறப்பு மலா் அலங்காரத்தில் தேரில் எழுந்தருளிய ஸ்ரீதேவி, பூமிதேவி சமேத ஸ்ரீ ரெங்கநாத பெருமாளுக்கு மகா தீபாராதனை காட்டப்பட்டது. தொடா்ந்து ‘கோவிந்தா, கோவிந்தா’ என முழக்கமிட்டபடி, ஆயிரக்கணக்கான பக்தா்கள் தேரின் வடம் பிடித்து இழுத்தனா்.
Advertisement
தோ் முக்கிய வீதிகளில் வலம் வந்து, நிலையை வந்தடைந்தது. தொடா்ந்து தீா்த்தவாரி நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.