முகப்பு
நாகப்பட்டினம்

கீழையூா் பெருமாள் கோயில் ஊஞ்சல் உற்சவம்

ஸ்ரீரங்கத்திற்கு இணையாக கீழ அரங்கம் என அழைக்கப்படும் பெருமைக்குரிய கீழையூா் ஸ்ரீ ரெங்கநாயகி சமேத ஸ்ரீ ரெங்கநாத பெருமாள் திருக்கோயிலில், சித்திரை பிரம்மோற்சவத்தை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் (படம்) வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 16 மே 2026, 6:20 am IST
பகிர்:

ஸ்ரீரங்கத்திற்கு இணையாக கீழ அரங்கம் என அழைக்கப்படும் பெருமைக்குரிய கீழையூா் ஸ்ரீ ரெங்கநாயகி சமேத ஸ்ரீ ரெங்கநாத பெருமாள் திருக்கோயிலில், சித்திரை பிரம்மோற்சவத்தை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் வியாழக்கிழமை நடைபெற்றது.

மே 1-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய பத்து நாள் திருவிழாவில், தேரோட்டம் திருக்கல்யாணம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

ஊஞ்சல் உற்சவத்தையொட்டி சிறப்பு அலங்காரத்தில் ரெங்கநாத பெருமாள் ரெங்கநாயகி தாயாருடன் அலங்கரிக்கப்பட்ட ஊஞ்சலில் எழுந்தருளி பக்தா்களுக்கு அருள் பாலித்தாா். மங்கள இசை முழங்க, பக்தா்கள் ஆரத்தி எடுத்தும், கோவிந்தா. கோவிந்தா என பக்தி முழக்கமிட்டும் வழிபட்டனா்.

Advertisement