மிலாது நபியையொட்டி, புதன்கிழமை (நவ. 21) காரைக்காலில் மதுக்கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து காரைக்கால் கலால் துறை துணை ஆணையர் ஏ. விக்ரந்த் ராஜா வெளியிட்ட செய்திக் குறிப்பு: மிலாது நபியையொட்டி, புதன்கிழமை காரைக்கால் மாவட்டத்தில் உள்ள கள், சாராயக்கடை, மதுக்கடைகள் (பார்), ஹோட்டல்களில் உள்ள மது விற்பனையகம் உள்ளிட்டவை மூடப்பட வேண்டும். புதுச்சேரி கலால் துறை சட்டத்தின்படி, இந்த உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.