காரைக்கால்

பதுக்கி வைத்திருந்த 4,455 லிட்டர் சாராயம் பறிமுதல்

DIN


காரைக்கால் பகுதியில் பதுக்கி வைத்திருந்த 4,455 லிட்டர் சாராயப் புட்டிகளை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
மக்களவைத் தேர்தல் வியாழக்கிழமை (ஏப்ரல் 18)  நடைபெறவுள்ளதையொட்டி, ஏப்ரல் 16-ஆம் தேதி முதல் 18-ஆம் தேதி வரை காரைக்கால் மாவட்டத்தில் கள்,  சாராயக் கடை, மதுபானக் கடைகள், ஹோட்டல்களில் இயங்கும் மதுக்கூடங்களை மூட வேண்டும் என கலால்துறை உத்தரவிட்டது. கடைகள் மூடப்படுவதையொட்டி திங்கள்கிழமை இரவு வரை அனைத்து மதுக்கடைகளிலும் வழக்கத்துக்கு மாறான அளவில் விற்பனை நடைபெற்றது. மக்களவைத் தேர்தலையொட்டி போலீஸார் நடத்திய சாராய சோதனையில், அம்பகரத்தூரில் உள்ளிட்ட பல்வேறு இடங்களில், ரூ.7.42 லட்சம் மதிப்புள்ள 4,455 லிட்டர் சாராயம் மற்றும் மதுபுட்டிகளை பறிமுதல் செய்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலில் சித்திரைத் தேரோட்டம் கோலாகலம்!

வாக்குப்பதிவு முடிந்த 24 மணிநேரத்துக்குள் தரவுகள் வெளியிட வேண்டும்: எஸ்.ஒய். குரேஷி

கர்நாடகம்: வாய் பேச முடியாத ஆறு வயது மகனை முதலைகள் வாழும் கால்வாயில் வீசிய தாய்

‘வடக்கன்’ படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

ரயில்களில் தண்ணீர்ப் பிரச்னை! பயணிகள் ஜாக்கிரதை!

SCROLL FOR NEXT