காரைக்கால்

சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரிக்கை

DIN


காரைக்காலில் சாலையோரங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நுகர்வோர் நலச் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
காரைக்கால் மாவட்டம், திருமலைராயன்பட்டினம் நுகர்வோர் நலச் சங்கத்தின் 100- ஆவது மாதாந்திரக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது. சங்க கெளரவத் தலைவர் எஸ். கணபதி தலைமை வகித்தார். செயலர் வி. சுப்பிரமணியன், பொருளாளர் எம்.ஆர். சந்தனசாமி, இணைச் செயலாளர் எஸ். கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். காரைக்கால் மாவட்ட பெட்காட் செயலர் எஸ். சிவக்குமார், வைஜெயந்தி ராஜன், நெடுங்காடு சட்டப் பேரவைத் தொகுதி செயலாளர் ராஜ் ஆகியோர் கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்றுப் பேசினர்.
கூட்டத்தில், சங்க செயல்பாடுகள் மற்றும் பொதுமக்களின் நலனைப் பாதுகாக்கும் வகையில் நடத்தப்படவேண்டிய விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
தீர்மானங்கள்: மின்கட்டணம் செலுத்த குறைந்தபட்சம் 20 நாள்கள் கால அவகாசம் அளிக்க மின்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்; குண்டும், குழியுமாக உள்ள திருமலைராயன்பட்டினம் கிழக்கு புறவழிச் சாலையை பொதுப்பணித் துறை சீரமைக்க வேண்டும்; சாலையோரங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில், நுகர்வோர் நலச் சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். சங்கத் தலைவர் வி. ராஜேந்திரன் வரவேற்றார். துணைத் தலைவர் ஜி. ஆனந்தகிருஷ்ணன் நன்றி கூறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவை தேர்தல்: வீட்டிலிருந்தபடியே வாக்குப்பதிவு செய்த மூத்த அரசியல் தலைவர்கள்

திமிரும் தன்னடக்கமும்...!

வார இறுதி நாட்கள் - மெட்ரோ அறிவித்த சூப்பர் ஆஃபர்

மருத்துவ கடைநிலை ஊழியர்களுக்கு 3 விதமான பணிநேரங்கள்: மக்கள் நல்வாழ்வுத் துறை

நாட்டு நடப்பு!

SCROLL FOR NEXT