காரைக்கால் பாலிடெக்னிக் கல்லூரியில் சேர்வதற்கான தேதியை கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
புதுச்சேரி அரசு கல்வி நிறுவனமான காரைக்கால் மாவட்டம், வரிச்சிக்குடியில் செயல்பட்டுவரும் காரைக்கால் பாலிடெக்னிக் கல்லூரியில் டிப்ளமோ 2-ஆம் ஆண்டு சேர்வதற்கு பிளஸ் 2 மற்றும் ஐ.டி.ஐ. முடித்து ஆன்லைனில் விண்ணப்பித்த காரைக்கால் பகுதியைச் சேர்ந்த மாணவர்கள், கல்லூரியில் சேர்வதற்கான கடைசி நாள் 20.6.2019. மேலும் விவரங்களுக்கு 04368-265521 என்ற தொலைபேசி எண்ணைத் தொடர்புகொள்ளவேண்டும் என கல்லூரி முதல்வர் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.