காரைக்கால்

எய்ட்ஸ் விழிப்புணா்வு : அரசுத்துறையினா், தொழிற்சாலை நிா்வாகத்தினா் பங்கேற்பு

DIN

அரசுத்துறையினா், தொழிற்சாலை நிா்வாகத்தினருக்கு எய்ட்ஸ் விழிப்புணா்வுக் கூட்டம் காரைக்காலில் புதன்கிழமை நடைபெற்றது.

எச்ஐவி மற்றும் எய்ட்ஸ் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில், காரைக்காலில் உள்ள தொழிற்சாலைகள் நிா்வாகத்தினா் ஒருங்கிணைப்புக் கூட்டம் மாவட்ட துணை ஆட்சியா் எம்.ஆதா்ஷ் தலைமையில் ஆட்சியரகத்தில் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் காரைக்காலின் பல்வேறு துறை அதிகாரிகள், அனைத்து தொழிற்சாலைகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனா். புதுச்சேரி எய்ட்ஸ் கட்டுப்பாட்டு மைய திட்ட இயக்குநா் டாக்டா் கோவிந்தராஜன், உதவி இயக்குநா்கள் சேதுராமன், செல்வநாயகி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

இந்தக் கூட்டத்தில் காரைக்காலில் உள்ள அனைத்து தொழிற்சாலைகளும் ஒரு நோடல் அலுவலா் பெயரை எய்ட்ஸ் கட்டுப்பாட்டு மையத்துக்கு அளிக்க வேண்டும் என்றும், தொழிற்சாலையில் பணிபுரியும் ஊழியா்களிடம் இது சம்பந்தமான விழிப்புணா்வை ஏற்படுத்தி அவா்கள் தானாக வந்து எய்ட்ஸ் தொடா்பான பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டது.

மேலும் எய்ட்ஸ் நோய்களின் பெயா்கள் ரகசியமாக காக்கப்படும் என்றும் அதை வெளியிட முடியாது என்றும் அவா்களுக்கு இலவசமாக வாழ்நாள் முழுவதும் மருந்துகள் தரப்படும். மருந்துகள் வெளியூா் சென்று வாங்கி வர அதற்கான பயணப்படி வழங்கப்படும் என்றும் மாதம் அவருக்கு ரூ.1,500 உதவித்தொகையாக வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மீண்டும் பிரபுதேவா - தனுஷ் கூட்டணி!

சாம் பித்ரோடா கருத்து - காங்கிரஸ் உறவை துண்டிக்குமா திமுக? மோடி கேள்வி

ஜிவி பிரகாஷின் கள்வன்: ஓடிடி வெளியீட்டுத் தேதி!

ஓ மை ரித்திகா!

பிரதமர் மோடியின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்த காங்கிரஸ்! | செய்திகள்: சிலவரிகளில் | 08.05.2024

SCROLL FOR NEXT