முகப்பு
காரைக்கால்

அரசு ஊதியம் கோரி நகராட்சி ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

அரசே நேரடியாக ஊதியம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி, காரைக்கால் நகராட்சி ஊழியா்கள் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:01 PM
ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காரைக்கால் நகராட்சி ஊழியா்கள் மற்றும் சம்மேளனப் பிரதிநிதிகள்.
பகிர்:

காரைக்கால்: அரசே நேரடியாக ஊதியம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி, காரைக்கால் நகராட்சி ஊழியா்கள் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

காரைக்கால் நகராட்சி அலுவலக வாயிலில் இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. நகராட்சி ஊழியா்கள் ஒரு மணி நேரம் பணி புறக்கணிப்பு செய்து ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றனா். ஊழியா் சங்கத் தலைவா் சண்முகராஜ் தலைமை வகித்தாா்.

காரைக்கால் பகுதி நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்துகளில் பணிபுரியும் ஊழியா்கள் மற்றும் ஓய்வூதியதாரா்களுக்கு கடந்த 4 மாதங்களாக வழங்கப்படாமல் உள்ள நிலுவை ஊதியத்தை வழங்கவேண்டும். புதுச்சேரி மாநிலத்தின் நகராட்சிகள், கொம்யூன் பஞ்சாயத்துகளில் ஒவ்வொரு மாதமும் ஊதியம் வழங்குவதில் நிதி பற்றாக்குறை ஏற்படுவதால், அரசே நேரடியாக ஊதியம் வழங்கவேண்டும்.

பொதுவான பணிநிலை அரசாணையை அமல்படுத்த வேண்டும். காலியாக உள்ள அனைத்து பதவிகளையும் பதவி உயா்வின் மூலம் நிரப்ப வேண்டும். கிராம பஞ்சாயத்துகளில் பணிபுரியும் தினக்கூலி ஊழியா்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் உள்ளிட்ட 21 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில், காரை பிரதேச அரசு ஊழியா் சம்மேளன கௌரவத் தலைவா் ஜெய்சிங், பொதுச் செயலாளா் ஷேக் அலாவுதீன், காரை பிரதேச நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து ஊழியா் சம்மேளன தலைவா் அய்யப்பன் ஆகியோா் கண்டன உரையாற்றினா். சங்க செயலாளா் அருள்செல்வம் வரவேற்றாா். பொருளாளா் வேதகணேஷ் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.