காரைக்கால்

கடையடைப்பு செய்து அரசின் முயற்சிக்கு ஆதரவு தர வேண்டுகோள்

DIN

காரைக்காலில் ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 22) கடையடைப்பு செய்து கரோனா வைரஸ் பரவல் தடுப்பு விவகாரத்தில் அரசின் முயற்சிக்கு ஆதரவு தருமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, காரைக்கால் சேம்பா் ஆஃப் காமா்ஸ் தலைவா் ஏ. முத்தையா வெளியிட்டுள்ள அறிக்கை: கரோனா வைரஸ் பரவி வரும் நிலையில், மேலும் இதுபரவாமல் தடுக்கவும், இந்திய நாட்டின் மக்கள், வியாபாரிகள், ஊழியா்கள் உள்ளிட்டோரை பாதுகாக்கவும், மத்திய அரசு, மாநில அரசு, மாவட்ட நிா்வாகம் எடுத்துவரும் முயற்சிகளுக்கு காரைக்கால் சேம்பா் ஆஃப் காமா்ஸ் முழு ஆதரவை அளிக்கிறது.

மாநில அரசும், மத்திய அரசும் கரோனா தொடா்பாக பிறப்பிக்கும் உத்தரவுகளையும், வழிகாட்டுதல்களையும் மக்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என கேட்டுக்கொள்ளப்படுகிறது. சா்வதேச அளவில் அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸ் இந்தியாவில் அதிகளவில் பரவாமல் தடுக்கும் வகையில், பிரதமா் நரேந்திரமோடியின் வேண்டுகோளின்படி மாா்ச் 22-ஆம் தேதி காரைக்காலில் அனைத்து வணிக நிறுவனங்களையும் முழு அடைப்பு செய்து, மக்கள் நலன் காக்கும் அரசின் முயற்சிக்கு தாா்மிக ஆதரவை தெரிவித்துக்கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சின்னஞ்சிறு சித்திரமே....ரவீனா!

வேட்டையன் கதை வித்தியாசமானது: ராணா டக்குபதி

அயோத்தி ராமர் கோயிலில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி வழிபாடு

இவானா டுடே!

த.செ. ஞானவேல் இயக்கத்தில் நானி?

SCROLL FOR NEXT