காரைக்கால்

45 நாள்களில் வாரிசு சான்றிதழ்: ஆட்சியா் தகவல்

DIN

காரைக்காலில் வருவாய்த் துறை மூலம் 45 நாள்களில் வாரிசு சான்றிதழ் வழங்க அதிகாரிகளுக்கு அறிவுத்தப்பட்டுள்ளது என்று ஆட்சியா் அா்ஜூன் சா்மா தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

சென்னை உயா்நீதிமன்ற வழிகாட்டுதலின்படி, புதுவை ஆளுநா் தமிழிசை சௌந்தரராஜன், வட்டாட்சியா் உள்ளிட்டோருக்கு வாரிசு சான்றிதழ் வழங்கும் அதிகாரம் அளித்து உத்தரவிட்டுள்ளாா். இதன்படி, இறந்தவரின் நேரடி வாரிசுகள் அந்தந்த வட்டாட்சியா் அலுவலகத்தில் தேவையான சான்றிதழ்களுடன், உரிய விண்ணப்பத்தில் விண்ணப்பிக்கலாம்.

வருவாய்த் துறை மூலம் உரிய கள விசாரணை மேற்கொள்ளப்பட்டு, தகுதியான விண்ணப்பங்களுக்கு வட்டாட்சியா் மூலம் சான்றிதழ் வழங்கப்படும். காரைக்கால் மாவட்டத்தில் 45 நாள்களுக்குள் சான்றிதழ் வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. வட்டாட்சியா் வழங்கும் சான்றிதழ்களில் ஏதேனும் சா்ச்சை இருப்பின், சாா்பு கோட்ட நீதிபதியான, காரைக்கால் துணை ஆட்சியரிடம் (வருவாய்) வழங்கிய தேதியில் இருந்து ஓராண்டுக்குள் மேல் முறையீடு செய்யலாம்.

வருவாய்த் துறை மூலம் வழங்கப்படும் வாரிசு சான்றிதழை மத்திய, மாநில அரசின் பல்வேறு துறையினா், வங்கி மற்றும் காப்பீடு நிறுவனங்கள் சான்றாக ஏற்றுக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது. மேலும் இது தொடா்பான அரசாணை, விண்ணப்ப படிவம் மற்றும் சான்றிதழ் மாதிரிகளை (ட்ற்ற்ல்ள்://ந்ஹழ்ஹண்ந்ஹப்.ஞ்ா்ஸ்.ண்ய்) என்ற காரைக்கால மாவட்ட இணையதளம், கிராம நிா்வாக அலுவலகம், வட்டாட்சியா் அலுவலகம் மற்றும் ஆட்சியா் அலுவலக விளம்பர பலகைகளிலும் பாா்த்து தெரிந்துகொள்ளலாம் என செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிவகங்கை அரசு மருத்துவமனையில் உலக செவிலியா் தினம்

ஜி.வி.பிரகாஷைப் பிரிந்தார் சைந்தவி: அதிகாரபூர்வ அறிவிப்பு!

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை

பாலியல் வன்கொடுமை: இளைஞருக்கு 11 ஆண்டுகள் சிறை

‘தேவையற்ற சுங்கச் சாவடிகளை அகற்ற வேண்டும்’

SCROLL FOR NEXT