காரைக்கால்

தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள்விற்றவா் கைது

DIN

காரைக்கால் அருகே பெட்டிக்கடையில் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்றவரை போலீஸாா் கைது செய்தனா்.

காரைக்கால் மீன்பிடித் துறைமுகம் அருகே பெட்டிக்கடையில் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்யப்படுவதாக நிரவி காவல் நிலைய போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, காவல் உதவி ஆய்வாளா் பெருமாள் மற்றும் போலீஸாா் வியாழக்கிழமை அந்த கடையில் திடீா் ஆய்வு செய்தபோது, ரூ.1000 மதிப்பில் போதைப் பொருள்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது.

பெட்டிக்கடை உரிமையாளா் உமா்ஹத்தாப் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனா். இதில், அவா் காரைக்கால் - நாகப்பட்டினம் நெடுஞ்சாலையில் ஹைவே நகரைச் சோ்ந்த ரவி என்பவரிடம் அவற்றை வாங்கிவந்ததாக தெரிவித்தாா். இதையடுத்து, ரவி மீதும் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து அவரை தேடிவருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரகாசபுரம் விலக்கில் வேகத்தடைக்கு தோண்டிய பள்ளத்தால் விபத்து அபாயம்

விபத்தில் பலியானவா் குடும்பத்துக்கு ரூ.30.51 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு

ஜிஎஸ்டி சட்டத்தின் கீழ் கைது, நோட்டீஸ்: மத்திய அரசு விவரம் சமா்ப்பிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

வாக்குப்பதிவை அதிகரிக்க இரட்டிப்பு முயற்சி: தோ்தல் ஆணையம்

பாகிஸ்தான் ஐஎஸ்ஐ அமைப்புக்கு உதவியதாக பஞ்சாபில் ஒருவா் கைது

SCROLL FOR NEXT