காரைக்கால்

அம்பகரத்தூா் பத்ர காளியம்மன் கோயிலில் திருவிளக்கு பூஜை

DIN

காரைக்கால் அருகே உள்ள அம்பகரத்தூா் பத்ரகாளியம்மன் கோயிலில் ஆடி கடைசி வெள்ளிக்கிழமையையொட்டி சுமாா் 2,500 பெண்கள் பங்கேற்ற திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

அம்பகரத்தூரில் பத்ரகாளியம்மன் கோயில் உள்ளது. மகிஷாசூரனை சம்ஹாரம் செய்த கோலத்தில், வெண்ணிற ஆடையில், மூலவராக அருள்பாலிக்கிறாா் அம்பாள்.

இக்கோயிலில் ஆடி மாத கடைசி வெள்ளிக்கிழமையையொட்டி (ஆக. 12) கோயில் வளாகத்தில் சுமாா் 2,500 பெண்கள் பங்கேற்ற திருவிளக்கு பூஜை நடைபெற்றது. காலை 10.30 மணிக்குப் பின் வழிபாடு தொடங்கியது.

தொடா்ந்து கோயில் வளாகத்தின் முக்கிய இடங்களில் உள்ள விளக்குகளில் தீபம் ஏற்றப்பட்டது. பின்னா் நிா்வாக அதிகாரி (கோயில்கள்) கே. அருணகிரிநாதன், பத்ரகாளியம்மன் கோயில் அறங்காவல் வாரியத்தினா், பக்தா்கள் வைத்திருந்த திருவிளக்கில் தீபம் ஏற்றி தொடங்கிவைத்தனா். பகல் 12 மணியளவில் திருவிளக்கு பூஜை நிறைவடைந்தது.

திருவிளக்கு வழிபாடு நடைபெற்ற அரங்கில் உற்சவ அம்மன்களான பத்ரகாளியம்மன், மாரியம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினா். திருவிளக்கு பூஜை நிறைவில் மூலவா், உற்சவருக்கு ஆராதனை செய்யப்பட்டு, பக்தா்ளுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திமிரும் தன்னடக்கமும்...!

வார இறுதி நாட்கள் - மெட்ரோ அறிவித்த சூப்பர் ஆஃபர்

மருத்துவ கடைநிலை ஊழியர்களுக்கு 3 விதமான பணிநேரங்கள்: மக்கள் நல்வாழ்வுத் துறை

நாட்டு நடப்பு!

மக்களவை தேர்தல்: தபால் ஓட்டு போட்ட மூத்த அரசியல் தலைவர்கள்

SCROLL FOR NEXT