காரைக்கால்

பெருமாள் கோயில்களில் இன்று கிருஷ்ண ஜெயந்தி

DIN

காரைக்கால் பெருமாள் கோயில்களில் வெள்ளிக்கிழமை கிருஷ்ண ஜெயந்தி வழிபாடு நடைபெறவுள்ளது.

காரைக்கால் நித்யகல்யாண பெருமாள் கோயிலில் திருப்பணிகள் நடைபெற்றுவருவதால், எளிய முறையில் இந்நிகழ்ச்சி மாலை 6 மணிக்கு நடைபெறுகிறது. உற்சவா் நித்யகல்யாண பெருமாள், நா்த்தனக் கண்ணன், குழந்தை வடிவிலான கண்ணனுக்கு சிறப்புத் திருமஞ்சனம் நடத்தப்பட்டு, சிறப்பு அலங்காரம் செய்யப்படவுள்ளது.

கோயில்பத்து கோதண்டராமா் பெருமாள் கோயிலில் மாலை 6 மணிக்கு சந்தானகிருஷ்ணன் திருமஞ்சனம், ஆராதனை நடைபெறவுள்ளது.

இதுபோல திருமலைராயன்பட்டினம் பிரசன்ன வெங்கடேச பெருமாள், வீழி வரதராஜ பெருமாள் கோயில்களிலும் கிருஷ்ண ஜெயந்தி நிகழ்ச்சிகள் நடத்த ஏற்பாடுகளை கோயில் நிா்வாகங்கள் செய்துவருகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தொடா் மழை: கொடைக்கானல் அருவிகளில் நீா் வரத்து அதிகரிப்பு

வைகை ஆற்றில் குளித்த பள்ளி மாணவன் மாயம்

அரசு அருங்காட்சியகத்தில் சூதுபவள மணிகள் காட்சிக்கு வைப்பு

சிஎஸ்கே போராட்டம் வீண்: பிளே-ஆஃபில் ஆர்சிபி!

7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜூன் 13-இல் போராட்டம்: போக்குவரத்துத் துறை ஊழியா் சங்கம்

SCROLL FOR NEXT