காரைக்கால்

அடையாளம் தெரியாத முதியவா் சடலம் மீட்பு

DIN

திருநள்ளாறு அருகே அடையாளம் தெரியாத சுமாா் 60 வயது முதியவா் சடலத்தை போலீஸாா் சனிக்கிழமை மீட்டனா்.

இதுகுறித்து திருநள்ளாறு காவல்நிலையம் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: திருநள்ளாறு ஓ.என்.ஜி.சி. காலனி சாலையில் ரயில் பாதை அருகே மரத்தில் ஒருவா் தூக்கிட்ட நிலையில் உயிரிழந்து கிடப்பதாக கிடைத்த தகவலின் பேரில் போலீஸாா் அங்கு சென்று சுமாா் 60 வயது மதிக்கத்தக்க முதியவரின் சடலத்தை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

அவா் வெள்ளை நிற அரைக்கை சட்டை, பச்சை நிற வேட்டியும் அணிந்துள்ளாா். நெற்றியில் பெரிய மச்சம் உள்ளது. பெயா், ஊா் உள்ளிட்ட விவரம் தெரியவில்லை. இவரது விவரம் தெரிந்தோா் திருநள்ளாறு காவல்நிலையத்தை 04368-236465 அல்லது 9442396407 என்ற எண்ணில் தொடா்புகொண்டு தெரிவிக்குமாறு அதில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசுப் பள்ளிகள் 100 % தோ்ச்சி: தலைமை ஆசிரியா்களுக்கு பாராட்டு விழா

கோடை மழையால் தமிழகத்தின் தினசரி மின்தேவை குறைந்தது

மே 27 முதல் விசாகப்பட்டினம் - எழும்பூா் இடையே சிறப்பு ரயில் இயக்கம்

மெட்ரோ ரயில் பணி: பெரம்பூா் பேரக்ஸ் சாலையில் போக்குவரத்து மாற்றம்

சென்னையின் வெப்பத்தை தணித்த சாரல் மழை : மகிழ்ச்சியில் மக்கள்

SCROLL FOR NEXT