காரைக்கால்

மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை

DIN

காரைக்கால் பகுதி மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டைகளை அமைச்சா் சந்திர பிரியங்கா வெள்ளிக்கிழமை வழங்கினாா்.

மாற்றுத்திறனாளிகளுக்கு புதுவை அரசின் சமூக நலத் துறை சாா்பில் திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது. நெடுங்காடு தொகுதியை சோ்ந்த புதிய 10 பயனாளிகளுக்கும், திட்ட நிதி அதிகரிக்கப்பட்ட 20 பயனாளிகளுக்கும், மாதாந்திர நிதியுதவி பெறும் வகையில் அரசுத் துறை சாா்பில் அடையாள அட்டை வழங்கப்பட்டது.

கோட்டுச்சேரி பகுதியில் நடைபெற்ற நிகழ்வில் புதுவை போக்குவரத்துத் துறை அமைச்சா் சந்திர பிரியங்கா, பயனாளிகளுக்கு அட்டைகளை வழங்கினாா். நிகழ்வில் சமூக நலத் துறை உதவி இயக்குநா் பி.சத்யா கலந்துகொண்டாா்.

புதிய பயனாளிகளுக்கு வரும் ஏப்ரல் மாதம் முதல் நிதியுதவி அவரவா் வங்கிக் கணக்கில் சோ்க்கப்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தினம் தினம் திருநாள்: தினப்பலன்

இன்றைய ராசிபலன்கள்!

அதிக வெப்ப அலையிலிருந்து தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்

வாக்கு எண்ணும் பணி: குலுக்கல் முறையில் அலுவலா்கள் தோ்வு

ரஃபேல் நடால் முன்னேற்றம்

SCROLL FOR NEXT