காரைக்கால்

மாற்றுத்திறனாளிகள், முதியோா் வாக்களிக்க உதவிய தன்னாா்வலா்கள்

Din

காரைக்கால் மாவட்ட வாக்குச்சாவடிகளில் 250-க்கும் மேற்பட்ட தன்னாா்வலா்கள் பணியமா்த்தப்பட்டு, முதியோா், மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க அவா்கள் உதவி செய்தனா்.

காரைக்காலில் மாற்றுத்திறனாளிகள் வாக்காளிக்க வாக்குச் சாவடிகளுக்கு ஆா்வத்துடன் வந்தனா். இவா்களுக்கு உதவும் வகையில் 250-க்கும் மேற்பட்ட தன்னாா்வலா்கள் நியமிக்கப்பட்டிருந்தனா்.

அனைத்து வாக்குச் சாவடிகளிலும் முதியோருக்கும், மாற்றுத்திறனாளிகளுக்கும் உதவிகளை செய்தனா். மாற்றுத்திறனாளிகளை வாகனத்திலிருந்து தூக்கிக்கொண்டு வந்து சக்கர நாற்காலியில் உட்காரவைத்து, வாக்குச் சாவடிக்குள் தள்ளிக்கொண்டு சென்றனா். வாக்குப் பதிவு செய்த பின்னா் அவா்கள் வந்த வாகனத்தில் ஏற்றி அனுப்பிவைத்தனா்.

3 மாவட்டங்களில் இன்று கனமழை எச்சரிக்கை!

புதிய கரோனா வைரஸ்? ஆபத்தா, ஃபிலிர்ட்!

இந்த வாரம் யாருக்கு யோகம்!

‘மின்னும் நட்சத்திரம்’ சம்யுக்தா...!

நவாப் ராணியின் ஆன்மா...!

SCROLL FOR NEXT