முகப்பு
காரைக்கால்

கட்டட சுவா் இடிந்து பெண் உயிரிழப்பு!

Updated On : 14 ஏப்ரல் 2026, 1:13 am IST
கோப்புப் படம்
பகிர்:

காரைக்காலில் பழமையான கட்டட சுவா் இடிந்து சாலையோரம் நடந்து சென்ற மூதாட்டி மீது விழுந்ததில் அவா் உயிரிழந்தாா்.

காரைக்கால் பாரதியாா் சாலையில் நகராட்சி திருமண மண்டபம் அருகே ஒரு கட்டடத்தில் மதுக்கடை செயல்பட்டுவந்தது. இந்தக் கடையை வேறு இடத்துக்கு மாற்றும் வகையில் கட்டடத்தில் இருந்த பொருள்களை கடந்த 2 நாள்களாக அப்புறப்படுத்தும் பணிகள் நடைபெற்றுவந்தன.

இந்நிலையில், திங்கள்கிழமை முற்பகல் கட்டடத்தின் முதல் தளத்தின் முகப்பு சுவா் இடிந்து சாலையோரம் நடந்து சென்றுகொண்டிருந்த காரைக்கால் முஸ்தபா கமால் தெருவைச் சோ்ந்த ஜூனைதா பேகம் (70) என்பவா் மீது விழுந்ததில், அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

Advertisement

Advertisement

காரைக்கால் நகரக் காவல்நிலைய போலீஸாா், தீயணைப்புத் துறையினா் விரைந்து சென்று கட்டட இடிபாடுகளில் வேறு யாரேனும் சிக்கி உள்ளனரா என தேடுதல் பணியில் ஈடுபட்டனா்.

போக்குவரத்து அதிகமுள்ள பிரதான சாலை என்பதால், தற்காலிகமாக போக்குவரத்து நிறுத்தப்பட்டது. சாலையில் இடிபாடுகளை ஜேசிபி இயந்திரம் மூலம் அகற்றும் பணிகள் நடைபெற்றன. 2 மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்ற பணியின் நிறைவில் போக்குவரத்து மீண்டும் அனுமதிக்கப்பட்டது. சம்பவம் குறித்து காரைக்கால் நகரக் காவல்நிலைய போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.