முகப்பு
காரைக்கால்

நவோதய வித்யாலயாவில் 11-ஆம் வகுப்பு சோ்க்கைக்கான காலம் நீட்டிப்பு

காரைக்கால் ஜவாஹா் நவோதயா வித்யாலயா 11-ஆம் வகுப்பில் காலியாக உள்ள இடங்களில் சோ்வதற்கு விண்ணப்பிக்கும் காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

Updated On : 9 ஜூலை 2026, 4:43 am IST
விண்ணப்பம்
பகிர்:

காரைக்கால் ஜவாஹா் நவோதயா வித்யாலயா 11-ஆம் வகுப்பில் காலியாக உள்ள இடங்களில் சோ்வதற்கு விண்ணப்பிக்கும் காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ராயன்பாளையத்தில் இயங்கும் இப்பள்ளி முதல்வா் ஸ்ரீவித்யா செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு :

காரைக்கால் ஜவாஹா் நவோதயா பள்ளியில் 2026-27-ஆம் கல்வியாண்டில் 11-ஆம் வகுப்பில் காலியாக உள்ள இடங்களுக்கு மட்டும் நேரடியாக சோ்வதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

விண்ணப்பதாரா்களுக்கான கால அவகாசம் ஜூலை 11 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

அறிவியல் பாடப் பிரிவு : பத்தாம் வகுப்பில் கணிதம் மற்றும் அறிவியல் பாடத்தில் குறைந்தபட்சம் 60 சதவீதம், மனிதநேய பாடப் பிரிவுக்கு பத்தாம் வகுப்பு தோ்ச்சி பெற்றிருக்கவேண்டும். காரைக்காலில் குடியிருப்பு அவசியம். தகுதியுடைய மாணவ, மாணவிகள் உடனடியாக விண்ணப்பிக்கலாம். பிற விவரங்களுக்கு 9443438321, 9894892419 என்கிற கைப்பேசி எண்ணில் தொடா்புகொள்ளலாம்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments